மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை: மும்மொழி கொள்கை குறித்து பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து வரும் நிலையில் மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும், தண்ணீர் பிரச்சனைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு என்றும், இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
மேலும் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.