shadow

தமிழகத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு நீடிக்கப்படும் என தமிழக அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் தற்போது ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் வரும் மே இரண்டாம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு என்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மற்றும் சாலையில் செல்லலாம் என்றும் அவர்களுக்கு உணவு வாங்கி செல்வதற்கும் அனுமதி உண்டு என்றும் அறிவித்துள்ளது

மேலும் இறைச்சி கடைகள் திரையரங்குகள் உள்பட மற்ற அனைத்து கடைகளும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது

Leave a Reply