மறுபரிசீலனை இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை ராகுல்காந்தி எடுத்தார்.

இந்த நிலைய்ல் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியபோது, ‘காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply