மருமகள் குளிப்பதை மறைந்திருந்து படம் எடுத்த மாமியார்: இப்படி எல்லாம் நடக்குமா?
மாமியார் மருமகள் சண்டை என்பது உலகம் முழுவதும் பணக்கார வீட்டில் இருந்து எளியவர் வீடு வரை நடைபெறும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் மருமகள் மீது உள்ள அதிருப்தியால் அவர் குளிக்கும் போது ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்த மாமியார் ஒருவர் குறித்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள 23 வயது பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து புகுந்த வீட்டிற்குச் சென்றார். தன்னுடைய எதிர்பார்ப்பில் மருமகள் இல்லை என்ற அவர் மீது ஆரம்பம் முதலே மாமியாருக்கு அதிருப்தி இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது மருமகளை சீண்டிக்கொண்டே வந்த மாமியார் ஒரு கட்டத்தில் அவரை அவரை பழி வாங்குவதற்காக மருமகள் குளிக்கும் போது மறைந்திருந்து தனது மொபைல் போனில் வீடியோ எடுத்திருக்கிறார்
பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் ஒரு போலி பக்கத்தை உண்டாக்கி அதில் பதிவுசெய்துள்ளார். இந்த வீடியோ பயங்கர வைரல் ஆன நிலையில் இது குறித்து தகவலறிந்த மருமகள் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் இந்த வீடியோவை பதிவு செய்தது யார்? என்பதை கண்டு பிடித்த போது அவருடைய மாமியாரே பதிவு செய்தது தெரியவந்தது
இதனையடுத்து மருமகளின் புகாரின் அடிப்படையில் மாமியாரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் தன்னுடைய மாமியாரை பழிவாங்க விரும்பாத மருமகள் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் மாமியாரை எச்சரித்து மட்டும் அனுப்பி விடுங்கள் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதனை அடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.