மருத்துவர்களுக்கு கடைசி கெடு: தமிழக அரசு எச்சரிக்கை


நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வரும் நிலையில், போராட்டம் செய்யும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப இன்று வரை கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த காலக்கெடு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டி ஒன்றில் கூறியதாவது: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப நாளை காலை வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் கூடுதல் கெடு முதலமைச்சரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இதுவரை போராட்டம் செய்த 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். நாளைக்குள் அனைத்து மருத்துவர்களும், பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் போராட்டம் நீடிக்கும் என்றால் புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Leave a Reply