மயிலாப்பூர் மகளாக அந்த தொகுதிகள் நான் போட்டியிட விரும்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீபிரியா தான் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்றும் அந்த தொகுதியின் மகளாக நான் போட்டியிட்டு அந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறினார்

மேலும் தேர்தல் ஆணையம் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என வரைமுறை வகுத்துள்ளதோ, அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்

Leave a Reply