மம்தா பானர்ஜி அரக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் கூறி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.
கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்த பிரகலாதனை அவரது தந்தை இரணியன் சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக சாக்சி மகாராஜ் தெரிவித்துள்ளார். இதேபோல் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று கூறுபவர்களை மம்தா பானர்ஜி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகச் சாடியுள்ளார்.
எனவே மம்தா பானர்ஜியும் அரக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர் தான் என்று சாக்சி மகாராஜ் விமர்சித்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் என்று மேற்குவங்கத்தில் பலரும் உச்சரிப்பதால், மம்தா ஆத்திரத்தில் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.