மம்தாவை தவறாக சித்தரித்த பிரியங்காவிற்கு ஜாமீன்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தோடு மார்பிங் செய்து தவறாக சித்தரித்து வெளியிட்டதாக பா.ஜ.க. பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி பிரியங்கா ஷர்மாவிற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்தது

Leave a Reply