மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் உள்ள அழகம்பட்டியில் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை நாம் தமிழர் கட்சியினர் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நலம் விரைவில் தேறிவிடும் என்றும் நாளை அவர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.