மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து மண்வெட்டியால் கொலை செய்த கணவன்!

மனைவியின் கள்ளக்காதலனை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து கணவன் கொலை செய்த சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே அனகாபுத்தூரில் சேர்ந்த சிவக்குமார் மற்றும் லட்சுமி தம்பதியினர் ஆந்திர மாநிலத்தில் கூலி வேலை செய்ய சென்றனர். அங்கு கார்த்திகேயன் என்பவர் லட்சுமிக்கு பழக்கமாகி நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் லட்சுமியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து அடிக்கடி மிரட்டி கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முடிவு செய்த லட்சுமி தனது கணவரிடம் தான் குளிக்கும்போது தெரியாமல் எடுத்த வீடியோ வைத்து தன்னை கார்த்திகேயன் மிரட்டுவதாக கூறியுள்ளார்.

இதனால் கார்த்திகேயனை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். மனைவி மூலம் தந்திரமாக வீட்டுக்கு கார்த்திகேயனை வரவழைத்த சிவகுமார் வீட்டிற்குள் கார்த்திகேயன் நுழைந்ததும் மண்வெட்டியால் தலையில் அடித்துக் கொலை செய்து வீட்டிற்கு பின்னால் குழிதோண்டி புதைத்துவிட்டார். இந்த கொலைக்கு லட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்திகேயனை காணவில்லை என போலீஸ் புகார் அளிக்க போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தபோது லட்சுமி வீட்டுக்கு கார்த்திகேயன் அடிக்கடி வந்தது தெரியவந்தது. இதனால் லட்சுமி மற்றும் அவரது கணவர் சிவகுமாரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இருவரும் கார்த்திகேயனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அதன்பி அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply