shadow

மனித சங்கிலிக்கு முன்பே விடுதலை வேண்டும்: அற்புதம்மாள் கோரிக்கை

தனது மகன் பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வர்ம் 9ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 7 பேரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும், அதே உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ளதால் அதனையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 பேரின் விடுதலையை வலியுறுத்தி அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மனித சங்கிலி நடைபெறவுள்ளதாகவும், மனித சங்கிலிக்கு முன்பே ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அற்புதம்மாள் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply