shadow

மனதின் தீய எண்ணங்களை அழிக்கும் மத்ஸய முத்திரை
5
விஷ்ணுவின் தசாவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம். உலகம் தண்ணீரால் சூழ்ந்து, அழியத் துவங்கியபோது மீனாக வந்து வேதங்களை காத்ததாக புராணங்கள் கூறுகிறது.

அதே போல் நம் உள்ளத்தில் இருக்கின்ற காமம், கோபம் போன்ற தீய எண்ணங்களை அழித்து உண்மையான மன ஆற்றலை மேம்படுத்தச் செய்யும், விரும்பியதை விரும்பியவாறு கிடைக்கவும், தடைகளைத் தாண்டிச் செல்லும் மனோபலத்தை தரவும் உதவும். இம்முத்திரை, கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் அதன் தீவிரத்தைக் குறைக்கச் செய்யும் வல்லமை பொருந்தியது.

யோக சாஸ்திரம், நம் உள் ஒடுங்கி இருக்கும் மூலாதார சக்தியை மேலே எழுப்ப உதவும் அற்புத முத்திரைகளில் இதையும் சேர்த்திருக்கிறது. பரத நாட்டியத்திலும், மீனின் வடிவை அபிநயம் பிடிக்க உதவுகிறது இம்முத்திரை .

ஒரு கையின் மேல் மற்றொரு கையை வைத்து, இடது கையின் ஒவ்வொரு விரலின் மேலும் வலது கையின் விரல்கள் மிகச்சரியாகப் பதியுமாறு வைத்து, இரு கட்டை விரல்களையும் வெளியே தெரியும்படி விரித்துப் பிடிக்க வேண்டும். 5–15 நிமிடம் இவ்வாறு செய்வது பலன் கொடுக்கும். எந்த முத்திரை செய்தாலும் இறுதியில் மறக்காமல் 5 நிமிடம் பிராண முத்திரை செய்து பயிற்சியை முடிக்க வேண்டும்.

Leave a Reply