மத்திய அரசை நம்பி மாநில அரசா? தம்பித்துரை
மாநில அரசுகளுக்கு திட்டங்களை தரும் மத்திய அரசு அதற்கான நிதியை தருவதில்லை. இருப்பினும் மாநில அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.
மேலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்றும், மத்திய அரசை நம்பி மாநில அரசு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்றும் கூறிய தம்பிதுரை எம்பி, மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தம்பிதுரை எம்பி, பாஜக மற்றும் அதன் தலைவர்கள் குறித்து தொடரந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.