மதுரை ஆதின புதிய இளவரசர் நியமனம்!
மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தின் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீன மரபுகளின்படி, தமது திருக்கரங்களால் ஆச்சார்ய அபிசேகம், மந்திரக் கசாயம், நிர்வாண தீட்சை, ஆறுகட்டி சுந்தரவேடம் போன்ற அனைத்து சம்பிரதாய சடங்குகளையும் செய்து, ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளவரசராக நியமனம் செய்துள்ளார்.
மேலும், மதுரை ஆதீன இளவரசருக்கு, “ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்ற திரு நாமத்தை சூட்டியருளினார்.
இந்த விழாவில் மதுரை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும், திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரானாக கடந்த 45 வருடங்களாக சிவத்தொண்டு புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.