shadow

மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாம் நிறுத்தத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து தடுப்பூசி செலுத்தும் முகாம் நிறுத்தப்பட்டதால் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

மேலும் முன்கூட்டியே அறிவிப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனையடுத்து
கோரிப்பாளையம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.