அதிர்ச்சித் தகவல்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்ததை அடுத்து அம்மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா குறைவாக இருந்ததால் தமிழக மக்கள் நிம்மதி அடைந்தனர்

ஆனால் திடீரென தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளது குறிப்பாக மதுரையில் நேற்று ஒரே நாளில் 157 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் பாதிப்பு அதிகமானதை அடுத்து, அதைக் கண்டு பயந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற பொது மக்களால் தான் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் நேற்று தமிழகத்தில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் சுமார் 1300 பேர் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply