மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் உள்ள மதுரை நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அந்த அறிவிப்புக்கு நிதி ஒதுக்கப்படாமலும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமலும் இருந்தது.
இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கு ரூ.1,258 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.
மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.