மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது?
மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என இதுகுறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளது
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 6ஆம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும், எப்போது நிறைவடையும் என்பதையும் அறிக்கையில் குறிப்பிட உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. எனவே வரும் டிசம்பர் மாதம் மதுரையில் எப்போது எய்ம்ஸ் அமையும் என தெரியும் என்று கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.