shadow

மதுரையில் இருந்து செங்கோட்டை வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இயக்கவிருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது

ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மீண்டும் இயங்க உள்ளது

மதுரை செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் இந்த ரயில் மதுரையிலிருந்து 7:10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை 10:35 சென்றடையும் என்றும் அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.10 மணிக்கு வந்தடையும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது

இந்த ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.