மதுரவாயல் ஏடிஎம் கொள்ளை: கல்லூரி மாணவி உள்பட மூவர் கைது
சென்னை மதுரவாயலில் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் ஊழியர்களை தாக்கி கொள்ளை அடித்த வழக்கில் இன்று 3 பேர் கைது சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 7ம் தேதி சென்னை மதுரவாயல் பகுதியி உள்ள கனரா வாங்கி ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் போது ரூ.10 லட்சம் கொள்ளை போனது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளையை செய்துவிட்டு தப்பியொடினர்
இந்த நிலையில் இன்று இந்த கொள்ளை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அக்யோ மாயே, அமு ஆகிய இருவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்னொருவர் சென்னை கல்லூரி மாணவி கிரியா என்பது குறிப்பிடத்தக்கது
மதுரவாயல், சென்னை கல்லூரி மாணவி, கைது ,ஏடிஎம் கொள்ளை
Leave a Reply
You must be logged in to post a comment.