மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி? நடிகை கஸ்தூரி கேள்வி

கடந்த இரண்டு நாட்களாக மாட்டுக்கறி பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய திமுக எம்பி கனிமொழி, ‘ ‘எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல’ என்று கூறினார்.

கனிமொழியின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ ’60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply