மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பெரும் பரபரப்பு

இந்தியாவில் தொடர்ந்து வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி அதில் அனைவரும் கையெழுத்திட்டனர்.

சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து இந்தக் கடிதத்தை எழுதினர். இது மிகப் பரவலாக இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம்

இந்த நிலையில் இந்த கடிதம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரனை செய்த நீதிமன்றம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது

இதனையடுத்து பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply