மணமகன்களுக்கு தாலி கட்டிய ஐடி மணப்பெண்கள்

காலங்காலமாக இந்திய திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் ஐடியில் பணிபுரியும் மணமகள்கள் இருவர் மணமகன்களுக்கு தாலிகட்டினார்.

கர்நாடகாவின் விஜய்புரா மாவட்டத்தில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மணமகன் அமித்துக்கும், குருபா சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் பிரியாவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஐடி பொறியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த திருமண விழாவில் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரியா, அமித்தின் கழுத்தில் தங்கத்திலான தாலி கட்டினார்.

இதே மேடையில் நடந்த இன்னொரு திருமணமான பிரபுராஜ் – அங்கிதா திருமணத்திலும் பிரபுராஜின் கழுத்தில் அங்கிதா தாலியை அணிவித்தார். இந்த இரண்டு புரட்சி திருமணங்களில் ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

Leave a Reply