மசூதிக்குள் மகளிரை அனுமதிக்க கோரும் வழக்கு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மசூதிக்குள் மகளிரை அனுமதிக்கக் கோரி புனேயைச் சேர்ந்த தம்பதியர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றதை அடுத்து, இதுகுறித்து மத்திய வக்பு கவுன்சில், மத்திய அரசு, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து இந்த் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply