மக்களவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மனுதாக்கல்!
மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறையீட்டை தாக்கல் செய்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, மனுவாக தாக்கல் செய்தால் இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என மதுரை உயர்நீதிமன்றக்கிளை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாட்கள் என்பதால் அந்த தேதியில் தேர்தல் வைத்தால் மக்கள் திருவிழா கொண்டாடுவதில் சிரமம் ஏற்படும் என்று ஏற்கனவே பலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.