மக்களவை தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்வு: சுனில் அரோரா அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன் மார்ச் 9 வரை காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

எனவே தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே ஏப்ரல் 18ஆம் தேதி 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்

நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 18 பேர், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏக்கள் மரணம் அடைந்ததால் 2 தொகுதிகள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதால் ஒரு எம்.எல்.ஏ தகுதி இழப்பு என மொத்தம் 21 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply