மக்களவை தேர்தலில் போட்டி இல்லை: பிரதமர் வேட்பாளரின் திடீர் அறிவிப்பு!
வரும் மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி, ராகுல்காந்தி ஆகியோர் பிரதமர் வேட்பாளர்களாக பாஜக, காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிடுகின்றனர். அதேபோல் மூன்றாவது அணியில் உள்ள சிலரும் பிரதமர் கனவில் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மாயாவதி
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் மாயாவதியின் இந்த அறிவிப்பு உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் மூன்றாவது அணியின் இன்னொரு தலைவரான மம்தா பானர்ஜி தற்போது முதலமைச்சராக இருப்பதால் அவரும் வரும் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.