மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: நாளை காலை 11.30 மணிக்கு விசாரணை

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை நாளை காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு ஒப்புதல்

நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் நாளை இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு பின் மகாராஷ்டிராவில் மீண்டும் திருப்புமுனை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Leave a Reply