மகாராஷ்டிரா அரசு கவிழ்கிறதா? கவிழ்க்க விட்டுவிடுவாரா அமித்ஷா?
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் தங்களுக்கு 162 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக சிவசேனா சற்றுமுன் அறிவித்துள்ளது.
எங்கள் பக்கம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்றும், 162 எம்.எல்.ஏக்களும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று மாலை 7 மணிக்கு சந்திக்க உள்ளோம் என்றும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிகையாள்ரகள் முன்னிலையில் 162 எம்.எல்.ஏக்களையும் அணிவகுப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களை நேரில் வந்து சந்திக்க ஆளுநருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மகாராஷ்டிராவில் பாஜக அரசு கவிழ்ந்துவிடும் நிலை இருப்பதாகவும், ஆனால் அமித்ஷா இருக்கும்போது அப்படி ஒரு கவிழ்ப்புக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.