shadow

மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளதால் 3வது அலை தொடங்கிவிட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது..

நேற்று முன் தினம் 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் நேற்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் 3,378 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் மகாராஷ்டிராவில் 1,23,225 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தமாக 60,98,177 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது