மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை அவமதித்த பூஜா பாண்டே கைது
கடந்த 30ஆம் தேதி இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவருடைய சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று அகில பாரத இந்து மகா சபையின் தேசியச் செயலாளர் பூஜா பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமரியாதை செய்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோர்களும் அவர்களுடன் 11 பேர்களையும் இன்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பேர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.