ப.சிதம்பரத்தை அடுத்து ராகுல்காந்திக்கு குறியா? அமித்ஷாவின் அதிரடி திட்டம்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ப.சிதம்பரம், டிகே சிவகுமார் என வரிசையாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்த குறி ராகுல்காந்திக்குத்தான் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிதான் இந்த வழக்கை தொடர்ந்தது என்பதும் இது தொடர்பாக விரைவில் சிபிஐ வழக்கு பதிய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஐந்து ஆண்டு ஆட்சி முடிவதற்குள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சிறையில் தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply