shadow

போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சல்யூட் அடித்த எஸ்பி

உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு எஸ்பி சல்யூட் அடித்த அரிதான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

உபி மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம்பாபு என்பவர் கடந்த 14 வருடங்களாக போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் உள்ளார். கான்ஸ்டபிளாகவே தனது வாழ்க்கையை கழிக்க எண்ணமின்றி அவர் அவ்வப்போது ஒருசில தேர்வுகளையும் எழுதி வந்தார். அவ்வாறு அவர் எழுதிய தேர்வுகளில் ஒன்று ஐஏஎஸ் தேர்வுக்கு இணையான பிசிஎஸ் என்ற தேர்வு.

இந்த நிலையில் ஒருநாள் ஷ்யாம்பாபுவின் மேலதிகாரியான எஸ்பி, அவரிடம் டீ வாங்கி வர சொன்னார். டீ வாங்கி வரும்போது தான் எழுதிய பிசிஎஸ் தேர்வின் முடிவு வெளிவந்ததை ஷ்யாம்பாபு ஆன்லைனில் பார்த்ததோடு, அந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றதையும் அறிந்தார். உடனே எஸ்பியிடம் டீயை கொடுத்துவிட்டு தான் பிசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் தனக்கான பணியையும் அவர் கூறினார். உடனே எஸ்பி எழுந்து நின்று ஷ்யாம்பாபுவுக்கு சல்யூட் அடித்துள்ளார்.

Leave a Reply