போராட்டம் செய்துவரும் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை. முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முக ஸ்டாலின் அரசு மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply