shadow

போன் பேசிக்கொண்டிருந்த ஓட்டல் ஊழியர் திடீர் மரணம்: எப்படி தெரியுமா?

கோவையில் ஓட்டல் ஊழியர் ஒருவர், போன் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் என்பவர், கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிவதாஸ் போன் பேசியபடியே, ஓட்டலின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், சிவதாஸ் அதற்கு முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply