போதையில் போலீசை கடித்து காயப்படுத்திய இளம்பெண்ணுக்கு ஜெயில்
சிங்கப்பூரில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை கடித்து காயப்படுத்தியதால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நியூசிலாந்து நாடை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது சகோதரி மற்றும் சகோதரியின் நண்பருடன் பாருக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார். பின்னர் இரவு உணவை முடித்த அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது போதையில் சாலையில் செல்பவர்களுடன் வம்புக்கு இழுத்துள்ளனர்.
இதனை அங்கிருந்த காவல்துறை அதிகாரி தட்டிக்கேட்டதை அடுத்து ஆத்திரமடைந்த கிறிஸ்டினா, காவல்துறை அதிகாரியின் கையை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கிறிஸ்டினாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.