போதிய பாதுகாப்பு வசதி இல்லை: ஜோதிமணி குற்றச்சாட்டு

வாக்கு எண்ணுக்கு மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி கரூர் உள்பட 38 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணுக்கு மையங்களில் போதிய பாதுகாப்பு வசதியுடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரங்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோக ஒவ்வொரு கட்சியின் பொறுப்பாளர்களும் இந்த மையங்களில் காவலுக்கு உள்ளனர். இந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இவ்வாறு ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply