போட்டியின்றி தேர்வானார் புதுச்சேரி சபாநாயகர்
புதுச்சேரியின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகிவிட்டதால் அந்த பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்காக இன்று காலை 9.40 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. கூட்டத்தை தற்காலிக சபாநாயகர் அனந்தராமன் தொடங்கி வைத்து சபாநாயகர் தேர்தலில் போட்டியின்றி சிவகொழுந்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகொழுந்துவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். கால அவகாசம் வழங்காமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.