போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை வாபஸ் பெற, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் சத்ய நாராயணன், ஹேமலதா அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் இந்த விஷயத்தில் அரசு, தொழிலாளர்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.