shadow

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்: அமைச்சர் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளுக்காக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளிக்காக முன்பணம் வழங்கவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் முன்பணத்திற்காக தமிழக அரரசு ரூ.45 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் இந்த பணம் நாளை முதல் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இன்று முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் போக்குவரத்து ஊழியர்கள் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply