பொள்ளாச்சி விவகாரம்: பல்வேறு நகரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இன்னும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோணம், நாமக்கல் மற்றும் நெல்லையிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply