பொள்ளாச்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்திடம் பெண் வழக்கறிஞர்கள்கோரிக்கை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வு முன் பெண் வழக்கறிஞர்கள் இன்று செய்த முறியீட்டில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்

Leave a Reply