பொள்ளாச்சி விவகாரம்: சிறைக்கைதிகள் திடீர் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேருக்கு எதிராக சக கைதிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர்

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டடுள்ளவர்கள் இருக்கும் அறையில் 3 பேரையும் அடைக்கக்கோரி கோவை சிறையில் உள்ள கைதிகள் போராட்டம் நடத்தினர்

இதனையடுத்து காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்தைக்குபின் சக கைதிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Leave a Reply