பொள்ளாச்சி விவகாரம்: கொந்தளிக்கும் கல்லூரி மாணவிகள்

பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் கோவை மாவட்டமே பரபரப்பில் உள்ளது

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவிகள் ஆவேசமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடுமலைபேட்டை ஜி.வி.ஜி பெண்கள் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் இதனை வலியுறுத்தி சாலைமறியல் செய்து வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் போராட்டம் எதிரொலியாக பொள்ளாச்சியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஒருசில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply