பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: 4ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மாணவிகள் மனு
பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கல்லூரி மாணவ, மாணவியர் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்
இந்த நிலையில் 6-ம் வகுப்பு மாணவி கிருத்திகா, 4 -ம் வகுப்பு மாணவி நதியா ஆகிய பள்ளி சிறுமிகள் இருவர், பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தூக்கு தண்டனை வழங்க கோரி பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.