பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற மூவர் இவர்கள் தான்

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அபிஜித் பானர்ஜி என்பவர் இந்தியாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் உள்பட மூவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply