பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதியில் முதல் கள்ள ஓட்டு பதிவானது

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை வேறொருவர் கள்ளவாக்காக செலுத்தியிருப்பது தெரியவந்தது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply