பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்ற போது, நிலக்கல் பகுதியில் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். அப்போது வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை என்று கூறி பொன்.ராதாகிருஷ்ணுடன் சென்றவர்களின் வாகனங்களை அனுமதிக்க எஸ்பி யதீஷ் சந்திரா மறுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
காவல்துறை அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பா.ஜ.க.வினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், யதீஷ் சந்திரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்வபவத்திற்கு பின் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உளவுத்துறை ஐஜி அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.