shadow

பொன்மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லை: தமிழக அரசு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தனது திறமையான விசாரணையால் காணாமல் போன, கடத்தல் செய்யப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வந்த நிலையில் திடீரென அவர் அந்த துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் மாற்றம் குறித்த வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தபோது,
சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளதாகவும், கடந்த ஒரு வருடமாக பொன்.மாணிக்கவேல் எந்த வித அறிக்கையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த அரசின் கொள்கை முடிவை ஆகஸ்ட் 8ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு அன்றைய தினத்தில் இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply