பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை
கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது பொன்பரப்பியில் பயங்கர வன்முறை நிகழ்ந்ததால் அந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பொன்பரப்பியில் தேர்தல் நேரத்தில் எவ்வித கலவரமும் நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளதால் அங்கு மறு வாக்குப்பதிவு அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.